நம் முன்னோர்கள்
ரொம்ப அறிவாளிகள்
ஆகையால்தான்
மனைவிக்கு வாழ்க்கைத்துணை என்று
ஞானமாய் பெயர் வைத்தார்கள்.
மற்ற எல்லா உறவுகளும்
ஒரு கட்டத்தில் கைவிட்டாலும்
அல்லது ஒதுங்கிவிட்டாலும்
மனைவி என்ற அற்புத உறவு மட்டுமே
இன்பத்திலும் துன்பத்திலும்
கூடவே வரும்.
ஆகையால்தான்
அவளுக்கு பெயர் வாழ்க்கைத் துணை.
மனைவி என்ற உறவின்
உன்னதம் புரிந்தோர்
ஒரு காலத்தும் அவளை
கண்ணீர் விட வைப்பதே இல்லை.